Wednesday, July 31, 2013

கரகாட்டக்காரன் பார்ட் 2 : கனகா மற்றும் ராமராஜன் தீவிர முயற்சி

சும்மா ஒரு பொய் நியூஸ்..
பல ஊடகங்களில் நடிகை கனகா கான்சர் நோயால் வாடிக்கொண்டிருப்பதாக முதலில் வந்த வதந்தி பின்பு அவரை இறக்கவும் வைத்தது. கனகாவிற்கு திடீர் என்று கிடைத்த இந்த பரபரப்பு, மதுரையில் கனகாம்பரம் விற்கும் சங்கத்தினரின் வருமானத்தை தற்காலிகமாக பெருக்கியது. இந்த சம்பவத்தை உன்னிப்பாக  கேரளாவில் இருந்து கவனித்த நடிகை கனகா, அவசர அவசரமாக தனது மேக்-அப் மேன்'ஐ அழைத்து க்ரூமிங் செய்து மாலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது, தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார். தவிர, நடிகர் ராமராஜர் "அம்மான்னா சும்மாயில்லடா-The Prime Minister" படத்தின்  இறுதிக்கொத்த படப்பிடிப்பில் இருப்பதாக தெரிவித்தார். அந்த வேலை முடிந்தவுடன், "கரகாட்டக்காரன் பார்ட் 2" படப்பிடிப்பு ஆரம்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

அப்பொழுது,  "நான் செத்ததாக போஸ்ட் செய்த போக்கத் தவர்கள், அதனை லைக் செய்த லூசுக்கள் மற்றும் அதனை ஷேர் செய்த சொத்தப்பயல்கள்  அனைவரும் ஆளுக்கு பத்து டிக்கெட் வாங்கி குடுமபத்துடன் படம் பார்க்க வேண்டும்" என்று அன்பு கட்டளை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கனகா ரசிகர் மன்றங்கள் பலவும் முகநூளில் புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. விரைவில் கனகா ராமராஜன் ஜோடி ஒரு ஆட்டம் ஆடும்.

- பேரில்லாத பத்திரிக்கை

கரகாட்டகாரன் 

No comments: