Sunday, August 4, 2013

அரசியலில் குதிக்க இருக்கிறார் BCCI சீனிவாசன்

சும்மா ஒரு பொய் நியூஸ்..
கடந்த சில மாதங்களாக பத்திரிக்கைகளில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்திருக்கிறார் BCCI'ன் பெரும்காவலர் சீனிவாசன். அவருக்கு இருக்கும் அதிகார ஆசையை கண்டு வியந்த அரசியல் கட்சிகள் அவரை அரசியலுக்கு உடனே வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களது அழைப்பை ஏற்ற சீனிவாசன், தன்னை தானே ஏலத்துக்கு உட்கொண்டுள்ளார்.

பிரபல அரசியல் கட்சிகளின்  வாசலில் சீனிவாசன் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்.....


முன்னணி கட்சிகளான அம்மா ராக்கர்ஸ், அய்யா ராயல்ஸ்   மற்றும் ராகுல் இத்தாலியன்ஸ் இடையே பெரும் போட்டி நிகழ்ந்து வருகிறது. இவர்களில் யார் சீனிவாசனை வெற்றிகரமாக கையில் போட்டுக்கொள்வார்கள் என்பதில் பெட்டிங் நடப்பதாக பரவலான செய்தி. இந்த பெட்டிங்க் சூதாட்டத்தில் அவரது குடும்பத்திற்கு சம்பந்தமில்லாத, அவர் இதுவரை பார்த்திராத அவரது 'மருமகன் Mr.மெய்யப்பன்' சம்பந்தப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.

இந்த பெட்டிங் சம்பந்தமான கரையை கலைக்க ஒரு தனி ஆணையம் அமைக்க இருக்கிறார் திரு. சீனிவசான். இந்த ஆணையத்தில், அவர் வீட்டிற்கு கணபதி ஹோமம் செய்ய வரும் பண்டிதர் ஒருவரையும், அவருக்கு கிளி ஜோசியம் பார்க்கும் ஜோசியக்காரர் ஒருவரையும் நியமனம் செய்துள்ளார். இந்த இருவரும் கொடுக்கும் நற்சான்றை பொருத்து தனது ஏலத்தொகை பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் தமிழகத்தில் ஒரு புது தலைவர் களமிறங்குவார்.

- பேரில்லாத பத்திரிக்கை

No comments: